Sunday, January 1, 2012

இளைஞர் மன்ற வளர்ச்சிக்கான திட்டமிடல் முகாம்: ராஜீவ் காந்தி இளையோர் மையம் - ஸ்ரீபெரும்புதூர்: 


இந்திய அரசு நேரு யுவ கேந்திர சார்பில் இளையோர் மன்ற வழிகாட்டுதல் புத்தகத்திற்கான வடிவமைப்பு முகாம் ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்றது..  இதில் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து இயக்குனர்களும் , மாவட்ட ஒருங்கினைப்பளர்களும் கலந்து கொண்டனர். தமிழகத்தின் சார்பில் சிவகங்கை மாவட்ட நேரு யுவகேந்திர சார்பில் நமது இளைஞர் மன்ற செயலாளர் கார்த்திகேயன் கலந்து கொண்டார் . நமது மண்டல இயக்குனர் திரு சடாச்சர வேல் அவர்களும் கலந்து கொண்டார்... 

Thursday, September 1, 2011

எதுவும் முடியும் .....

நண்பா நீ நினைத்தால் எதுவும் முடியும்,.....





உன் சுயம் அறி ......சுடர் விடு......

என் இனிய

இளைஞனே

சற்றே கவனி உற்றே நோக்கு


வெறுப்பின்

அம்சமில்லை

வாழ்க்கை

நெருப்பின் அம்சம்


உன் சுயம் அறி

அதில்

நீ சுடர் விடு

திக்கு திசையற்று

தீனர்களாய்

திரிவதில் பயனுண்டோ?


எத்திக்கும்

உன் பெயரை

உச்சத்தில்

உச்சரிக்க

வேண்டாமா?


முடியாது என்பது

முட்டாள்களின்

வார்த்தை

எதற்கும் முயற்சி செய்

இன்றேல்

பயிற்சி செய்....


ஒவ்வொரு உயிரின்

முயற்சியே

அதன் மலர்ச்சி ......


உன் மனதை

ஆழ உழு

உன் செவிகளை

கொஞ்சம்

அகல திற ......


விழிகளை

இன்னும்

விரித்தே வை ......


கேள்,

வெற்றி ஒன்றும்

கம்பசூத்திரம் அல்ல .....


நல்லவை நாடு

அல்லவை அகற்று

செய்வதை சொல்

சொல்வதை செய்.....


உலகம் உன்

சட்டைப்பையில் விழும்....






independence day-15-08-11














  நமது இளைஞர் மன்றம் மற்றும் கோவை ஜீவன் அறக்கட்டளை இணைந்து சுதந்திர தினத்தன்று கோவை அருகில் உள்ள தெந்குமரஹாடா என்ற மலை அடிவார கிராமத்தில் அமைந்துள்ள உயர்நிலை பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச சீருடை மற்றும் நோட்டு , பள்ளி உபகரங்கள் வழங்கியது ..... 


Thursday, November 11, 2010

Wednesday, August 25, 2010

வணிக கூட்டமைப்பு விருது




வணிக கூட்டமைப்பு விருது:

நமது இளைஞர் மன்றம் கிராமப்புற இளைஞர் மற்றும் மகளிர் மன்ற உறுப்பினர்களுக்கு பகுதி நேர வேலை வாய்ப்பை வழங்கும் நோக்கத்தோடு இந்தியாவின் பல முன்னணி நிறுவனங்களோடு வணிக ஒப்பந்தம் மேற்கொண்டு வீட்டிலிருந்த படியே முகவர்களாக செயல்படும் வைப்பை வழங்கி வருகிறது .... அந்த கூட்டமைப்பு நிறுவனமான பைனரி ப்ளுஸ் இந்தியா மார்க்கெட்டிங் நிறுவனம் சிறந்த விற்பனையாளர் (பிரான்ச் மேனேசர் அவார்ட்) நமது செயலாளர் அவர்களுக்கு வழங்கி சிறப்பித்தது.....

Tuesday, August 24, 2010

மத நல்லிணக்க நாள் விழா






மத நல்லிணக்க நாள் விழா:-
சிவகங்கை மாவட்ட நேரு யுவ கேந்திர மற்றும் வாய்ஸ் இளைஞர் நற்பணி மன்றம் இணைந்து மத நல்லிணக்க நாள் 24.8.2010 அன்று கொண்டாடப்பட்டது ..
தலைமை:- திரு.ஜவஹர் ,
மாவட்டஇளையோர் ஒருங்கிணைப்பாளர் ,
நேரு யுவ கேந்திர, சிவகங்கை
முன்னிலை :- திரு.ஆலிக்ஸ் மேரி , தலைமை ஆசிரியை ,
சிறப்புரை:- திரு .ராதாக்ருஷ்ணன் ,
செயலாளர், உலக சேவை சங்கம் ,தேவகோட்டை.
வாழ்த்துரை:- திரு.விஜயன் கிராம தலைவர் , பாவனகொட்டை
நன்றியுரை:- திரு.வே .கார்த்திகேயன்
செயலாளர், வாய்ஸ் இளைஞர் மன்றம் ,
விழாவின் பொது ஓவிய போட்டி ,பேச்சு போட்டி ,மாறுவேட போட்டி ,ஆகிய போட்டிகள் நடைபெற்றன .....